ஆப்நகரம்

இட்லி சுட்டு டாக்டர் பட்டம் வாங்கிய உணவக ஓனர்!

இட்லி குறித்த ஆய்வுக்காக அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்று இனியவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது! மிக்கி மவுஸ், குங்க்பூ பாண்டா, இனிப்பு, காரம், இனிப்பு-காரம், காய்கறி என பல வகை இட்லிகளை செய்து அசத்துகிறார் இனியவன்.

Samayam Tamil 23 Jun 2019, 11:36 am
இட்லி என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Samayam Tamil et95H0AF


இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேஸியாவை ஆண்ட இந்து சம்ய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றுவதாக, உணவு நிபுனர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இட்லியை பல வகையில் தயாரித்து வழங்குகிறார் எம்.இனியவன். முன்னாள் ஆட்டோ ஓட்டுநரான இனியவன் 8 வரை மட்டுமே படித்தவர். தமிழநாட்டின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான இட்லியை விதவிதமாக தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்க ஓர் உணவகம் திறக்க வேண்டும் என்ற இவரது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது.
தன் அட்டோ பயணி ஒருவர் இட்லி கடை வைத்திருந்ததைக் கண்டு தானும் இவ்வாறு உணவகம் துவங்க இனியவன் முடிவெடுத்தார். அதன்படி சென்னையில் மல்லிப்பூ இட்லி என்ற வெரைட்டி இட்லி கடை துவங்கினார்.

124.8 கிலோ எடையில் ராட்சத் இட்லி தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற இவர் முயன்றுள்ளார். கிட்டத்தட்ட 30 வகையான இட்லிகளைத் தயார் செய்யும் இனியவன் கடையில் வாடிக்கையாளர்கள் அவரது இந்த திறமைக்கு மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.

இட்லி மாவு அரைக்கும்போது அதில் தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக இளநீரை சேர்த்து அதில் இட்லி செய்துள்ளார். இந்த இட்லி இனிப்பாக இருக்கும். இட்லி குறித்த ஆய்வுக்காக அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்று இனியவனுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது! மிக்கி மவுஸ், குங்க்பூ பாண்டா, இனிப்பு, காரம், இனிப்பு-காரம், காய்கறி என பல வகை இட்லிகளை செய்து அசத்துகிறார் இனியவன்.

அடுத்த செய்தி