ஆப்நகரம்

சிலை கடத்தல் விவகாரம்: முக்கிய குற்றவாளி சரண்

சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என கருதபப்டும் தீனதயாளன் போலீசார் முன்பு இன்று சரணடைந்தார்.

TNN 4 Jun 2016, 12:54 pm
சென்னை: சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என கருதபப்டும் தீனதயாளன் போலீசார் முன்பு இன்று சரணடைந்தார்.
Samayam Tamil idol smuggling case deenadhayalan surrender
சிலை கடத்தல் விவகாரம்: முக்கிய குற்றவாளி சரண்


சென்னை ஆழ்வார்பேட்டை முர்ரேஸ்கேட் சாலையில் வசிக்கும் தொழிலதிபர் தீனதயாளனின் இல்லத்தில் கடந்த 31-ம் தேதி மேற்கொண்ட சோதனையில் ரூ.50 கோடி மதிப்பிலான 55 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டு, அதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சோழர் காலத்தைச் சேர்ந்த 34 சிலைகளும், தஞ்சை ஓவியங்களும் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தும் 600 ஆண்டுகள் முதல் 1,000 ஆண்டுகள் வரை பழைமையானது என்று தொல்பொருள் வல்லுநர்கள் தெரிவித்தனர்.

அதன்பின்னர் நடத்தப்பட்ட சோதனையில், 4 ஐம்பொன் சிலைகள், 1 கற்சிலை, 3 கண்ணாடி கற்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு போலீசாரால் மீட்கப்பட்டது.

இந்நிலையில், இந்த சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என கருதப்படும் தீனதயாளன் போலீசாரிடம் இன்று சரணடைந்தார்.

அவரிடம் தொடர்ந்து 60 நாட்கள் விசாரணை மேற்கொள்ளப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி