ஆப்நகரம்

தஞ்சை பெரிய கோவிலில் அதிரடி சோதனை; சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை!

தஞ்சை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 29 Sep 2018, 3:59 pm
தமிழ்நாட்டில் நீண்ட நாட்களாக கோவில் சிலைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதுகுறித்து ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
Samayam Tamil Thanjai Temple


இதுதொடர்பாக ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அமைக்கப்பட்டது. அவர்கள் கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் சென்னை தொழிலதிபர் வீட்டில் ரூ.100 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர்.

ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்ற ஆய்வில் காணாமல் போன சிலைகள், தற்போதுள்ள சிலைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Idol wing headed IG Pon.Manickavel raids in Thanjavur Temple.

அடுத்த செய்தி