ஆப்நகரம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடி; தஞ்சை பெரிய கோவிலில் 2வது நாளாக ஆய்வு!

தஞ்சை: பிரகதீஸ்வரர் கோவிலில் 2வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Samayam Tamil 21 Oct 2018, 12:43 pm
உலக பிரசித்த பெற்ற கோவில்களில் ஒன்றாக தஞ்சை பெரிய கோவில் விளங்குகிறது. இது யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் இருந்து ராஜராஜசோழன் சிலை மற்றும் அவருடைய பட்டத்து அரசி லோகமாதேவி சிலைகள் திருட்டு போயின.
Samayam Tamil Thanjai


இவற்றை நீண்ட தேடலுக்கு பின், குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர். பின்னர் தஞ்சை பெரிய கோவிலில் கொண்டு சேர்த்தனர்.

இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் நம்பிராஜன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் என மொத்தம் 55க்கும் மேற்பட்டோர் ஆய்வு செய்தனர்.

இதையடுத்து 2 நாளாக இன்றும் ஆய்வு நடைபெற்றது. அப்போது பெரிய கோவிலில் உள்ள பழைய ராஜராஜ சோழன் சிலையின் தொன்மைத் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

Idol wing inspects Thanjavur Big Temple in second day.

அடுத்த செய்தி