ஆப்நகரம்

ஆளுநரை பார்த்து பயப்பட ஸ்டாலின் ஒன்னும் எடப்பாடி பழனிசாமி இல்லை - பீட்டர் அல்போன்ஸ்

தமிழக ஆளுநர் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரம் மீறி செயல்பட்டால் தமிழக அரசு அதற்கு பயப்படாது என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

Samayam Tamil 26 Oct 2021, 1:07 pm
ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக ஒன்றிய அரசு நியமித்ததை தொடர்ந்து செப்டம்பர் 18ஆம் தேதி சென்னை ராஜ்பவனில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.
Samayam Tamil கோப்புப்படம்


பாட்னாவைச் சேர்ந்த ஆர்.என்.ரவி 1976 ஆம் ஆண்டு கேரள மாநில ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு 2012 ஆம் ஆண்டு புலனாய்வு பணியகத்தின் சிறப்பு இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றார். 2014 ஆம் ஆண்டு முதல் கூட்டுப் புலனாய்வுக் குழுவின் தலைவராகவும், 2018 ஆம் ஆண்டு தேசியப் பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பணியாற்றினார்.

முழுக்க, முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட அவரை நாகாலாந்து ஆளுநராக ஒன்றிய அரசு நியமித்தது. இந்நிலையில், அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், தமிழக அதிகாரிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வப்போது அழைத்து பேசுவது தமிழகத்தில் இரண்டு அரசுகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் ஆளுநர் தலையிட அவசியமே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது; ஜெயலலிதா முதல்வதாக இருந்தபோது எந்த அதிகாரியும் ஆளுநரை சந்திக்க கூடாது என்று உத்தரவு போட்டார். அரசு அதிகாரிகள் மட்டுமின்றி காவல்துறையில் இருந்தும் எந்த அதிகாரிகளும் ஆளுநரின் அழைப்புக்கு செவிசாய்க்கவில்லை.

தீபாவளி பண்டிகை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு நச் அறிவிப்பு!

அதே சமயம் முந்தைய ஆட்சி காலகட்டத்தில் வலுவற்று கிடந்த அதிமுக அமைச்சர்கள் சிலர் ஆளுநருக்கு வரவேற்பு கம்பளம் விரித்ததை தமிழக மக்கள் கைதட்டி சிரித்தனர். இப்போது ஜெயலலிதா ஆட்சியும் இல்லை, எடப்பாடியின் ஆட்சியும் இல்லை. அரசியல் சாசனத்தின்படி ஆளுநருக்கு எந்த அளவுக்கு அதிகாரம் இருக்கிறதோ அதை மதிப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் தயாராக இருப்பார். ஆனால், அதே நேரத்தில் ஆளுநரின் அதிகாரம் வரம்பு மீறினால் அதற்கு எடப்பாடி பழனிசாமியை போல மு.க. ஸ்டாலின் பயப்படமாட்டார். கலைஞர் சொன்னபடி உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற கொள்கை படிதான் திமுக செல்லும்.

அடுத்த செய்தி