ஆப்நகரம்

உள்ளாட்சித் தேர்தல் பதவிகள் ஏலம்: அமைச்சர் எச்சரிக்கை

உள்ளாட்சிப் பதவிகளுக்காக ஆங்காங்கே நடைபெற்று வரும் ஏலத்தை தடுக்க மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

Samayam Tamil 15 Dec 2019, 5:38 pm
சென்னை: உள்ளாட்சிப் பதவிகள் ஏலம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ரஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு


தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், வார்டு வரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் பின்பற்றபடவில்லை என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இது தொடர்பாக தொடர்ச்சியான சட்டப்போராட்டங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்தன. அதையடுத்து, நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனையை மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் எனவும், , 2011 மக்கள்தொகை அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர்: ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மர்ம நபர்கள் கொண்டாடிய ‘போகி’!

அதன்பின்னர் திட்டமிட்டபடி டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேட்புமனுத் தாக்கல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ஊராட்சித் தலைவர் பதவிக்கான ஏலம் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டைபட்டி கிராமத்தில் நடைபெற்ற ஏலம் விடும் சம்பவம் கொலையில் முடிந்தது.

உள்ளாட்சித் தேர்தல்: வியூகம் அமைக்க தொண்டர்களை அழைத்த ஸ்டாலின்

அதேபோல் நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர் பதவிக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ரஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் : நாம் தமிழர் கட்சிக்கு அடித்தது "லக்" !!

முன்னதாக, ஊராட்சித் தலைவர் பதவிக்கான ஏலம் ஆண்டாண்டு காலமாக நடக்கிறது. அதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி