ஆப்நகரம்

பெரும்பான்மை இல்லல கலச்சிருங்கப்பா; சும்மா வச்சிக்கிட்டு சீன்; கடுப்பான ராமதாஸ்...!

தமிழக அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், அதனை கலைத்து விடுவது நல்லது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

TNN 29 Aug 2017, 1:09 am
சென்னை: தமிழக அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், அதனை கலைத்து விடுவது நல்லது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil if not majority then collapse the govt says ramadoss
பெரும்பான்மை இல்லல கலச்சிருங்கப்பா; சும்மா வச்சிக்கிட்டு சீன்; கடுப்பான ராமதாஸ்...!


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வறட்சி, விலை உயர்வு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளால் தமிழக மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால், மக்களின் குறைகளை களைய வேண்டிய ஆட்சியாளர்களோ, எதிரணியிலிருந்து உறுப்பினர்களை இழுப்பது எப்படி என்பது குறித்தும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கூட்டத்தில் என்ன கதையை சொல்லலாம் என்பது குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

தங்களின் குறைகளைக் களைய வேண்டிய அரசு, பொறுப்பில்லாமம் ஊழல் செய்வதிலும், பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதிலும் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத மக்கள்,‘‘ இந்த மக்கள் விரோத அரசு போய்த் தொலையாதா?’’ என மனதிற்குள் புழுங்குகின்றனர்.

எனவே, தமிழக சட்டப்பேரவையை உடனடியாகக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆணையிட வேண்டும். யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்றால் தமிழக அரசைக் கலைப்பது கூட தவறில்லை.

If not majority then collapse the Govt says Ramadoss.

அடுத்த செய்தி