ஆப்நகரம்

மோடி போட்ட ரோட்டில்தான் பயணம் செய்வேன்.. அண்ணாமலை பரபர பேச்சு.. பிடிஆருக்கு கோரிக்கை வேறு..!

அமித் ஷா - அதிமுக தலைவர்கள் சந்திப்பு குறித்தும், பிடிஆர் ஆடியோ விவகாரம் குறித்தும் அண்ணாமலை பேசியுள்ளார்.

Authored byஜே. ஜாக்சன் சிங் | Samayam Tamil 30 Apr 2023, 4:43 pm
சென்னை: "பிரதமர் நரேந்திர மோடி எனக்காக ரோடு போட்டு கொடுத்திருக்கிறார்.. அதில்தான் இனி பயணம் செய்வேன்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Samayam Tamil annamalai speech


தமிழகத்தில் அதிமுக - பாஜக இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான மோதல் போக்கு நிலவி வந்தது. இரு கட்சிகளின் தலைவர்களும் குழாயடிச் சண்டை போடாத குறையாக ஒருவரையொருவர் கடுமையாக வசைபாடி வந்தனர். இதனால் அதிமுக - பாஜக கூட்டணி உடைந்துவிடும் என பேச்சுகள் அடிபட்டன.

இந்த சூழலில்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உயர்நிலைக் குழுவினர் டெல்லிக்கு சென்று அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசினர். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார். இதில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த மீட்டிங் முடிந்த மறுதினமே எடப்பாடியாரின் டோன் அப்படியே மாறியது. அண்ணாமலை எல்லாம் ஒரு தலைவரா.. அவரை பற்றி என்னிடம் கேட்காதீங்க.. என்று சில தினங்களுக்கு முன்பு கூறிய எடப்பாடி, அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லையே.. என ப்ளேட்டை மாற்றினார்.

இநநிலையில், சென்னையில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன் அதிமுக தலைவர்கள் சந்தித்து பேசியது முக்கியமான விஷயம். அதில் அரசியல், கூட்டணி என பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அது ஒரு அறையில் நடைபெற்ற சந்திப்பு. எனவே அங்கு என்னென்ன பேசப்பட்டது என்பதை வெளியில் சொல்ல முடியாது.. கூடாது. அதுதான் முறை. அதே சமயத்தில், இத்தனை நாட்களாக தமிழகத்தில் பாஜக வளர்வது குறித்து நாங்கள் என்னென்ன சொல்லி வந்தோமோ, அதுகுறித்து அப்போது பேசப்பட்டது.
"கிங்மேக்கர்".. கர்நாடகாவே அதிரும் ஒற்றை பெயர்.. பாஜகவின் நிஜ "பெருமாள் பிச்சை".. யார் இந்த பி.எல். சந்தோஷ்?
எனக்கான பாதையை பிரதமர் நரந்திர மோடியும், அமித் ஷாவும் தெளிவாக காட்டி இருக்கிறார்கள். என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்.. அடுத்த 5 ஆண்டுகளுக்கு நான் என்ன செய்ய வேண்டும்.. என எனக்கு ரோடு போட்டு கொடுத்திருக்கிறார்கள். அந்த பாதையில்தான் இனி என் பயணம் இருக்கும். மற்ற தலைவர்களுக்கும் அவர்களுக்கான பாதை சொல்லப்பட்டிருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதுதான் ஒரு தொண்டனின் கடமை. அதை நான் செய்வேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் ஆடியோ விவகாரம் குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "இந்தியாவில் இருக்ககூடிய ஒரு ஆளும் கட்சியின் நிதியமைச்சர் பேசியதாக ஒரு ஆடியோ பதிவு முதலில் வந்தது. அதன் தொடர்ச்சியான இரண்டாவது ஆடியோவை நான் வெளியிட்டேன். இப்போதும் சொல்கிறேன். இதில் பிடிஆர் ஏதும் தவறு செய்யவில்லை. அவர் ஒப்புதல் வாக்குமூலம்தான் அளித்திருக்கிறார். நான் வெளியிட்ட DMK FILES-க்கு ஆதாரமாக அவரது வாக்குமூலம் உள்ளது.

இந்த ஆடியோ பொய்யானது எனக்கூறி நீங்கள் (பிடிஆர்) வழக்கு தொடர்ந்தால், ஒரிஜினல் ஆடியோவை நாங்கள் சமர்ப்பிக்க தயாராக இருக்கிறோம். பிடிஆர் யாருடன் பேசினார்.. எப்போது பேசினார் என அனைத்து தகவல்களும் இருக்கி்ன்றன. அதையும் நாங்கள் கொடுக்கிறோம்" என்றார்.
எழுத்தாளர் பற்றி
ஜே. ஜாக்சன் சிங்
நான் ஜா.ஜாக்சன் சிங். 12 ஆண்டுகள் ஊடகத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். களத்தில் செய்தி சேகரித்த அனுபவமும் உண்டு. தேசிய, சர்வதேச செய்திகளில் ஆர்வம் அதிகம். தமிழக அரசியல் செய்திகளிலும் ஈடுபாடு கொண்டவன். எளிமையாகவும், சுவாரசியமாகவும் மொழிபெயர்ப்பதில் விருப்பம. இப்போது Times Of India சமயம் தமிழில் Digital Content Producer ஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி