ஆப்நகரம்

சோஷியல் மீடியாவை சரியா பயன்படுத்தினால், அடுத்து பாமக ஆட்சி தான்; ராமதாஸ் அறிவுரை!

சோஷியல் மீடியாவை சிறப்பாக பயன்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 31 Aug 2018, 5:01 am
சென்னை: சோஷியல் மீடியாவை சிறப்பாக பயன்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil Ramadoss


சென்னை அண்ணா சதுக்கம் அருகே உள்ள அண்ணா அரங்கத்தில் பாட்டாளி இளைஞர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய ராமதாஸ், சோஷியல் மீடியாக்களை தவறான வழியில் பயன்படுத்தினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும்.

அதனை கட்சி வளர்ச்சிக்காக மட்டும் பயன்படுத்துங்கள். அப்படி செய்தால் நாம் ஆட்சியை பிடித்து விடலாம். நாட்டின் பிற கட்சிகளுக்கே பாமக தான் வழிகாட்டியாக திகழ்கிறது.

அவதூறு அரசியலை வளர்ப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். தமிழகத்தில் உள்ள 40% இளைஞர்கள் பாமகவில் தான் இருக்கின்றனர். அவர்கள் அன்புமணியை முதலமைச்சராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்சியின் நலன் கருதி அனைவரையும் மதித்து, கட்டுப்பாட்டுடன் இளைஞர்கள் நடந்து கொள்ள வேண்டும். பாமகவைத் தவிர பிற 3 எழுத்து கட்சிகளை வேரூன்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

If we use the social media efficiently, we will rule the state says Ramadoss.

அடுத்த செய்தி