ஆப்நகரம்

தேனியில் வீட்டில் பிரசவம் பாா்த்ததாக பெண்ணின் உறவினா் கைது

தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டியில் வீட்டில் வைத்தே பிரசவம் பாா்த்த சம்பவத்தில் பெண்ணின் உறவினரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.

Samayam Tamil 4 Aug 2018, 2:30 pm
தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டியில் வீட்டில் வைத்தே பிரசவம் பாா்த்த சம்பவத்தில் பெண்ணின் உறவினரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
Samayam Tamil lock up


தேனி மாவட்டம் கோடங்கிப்பட்டி பகுதியைச் சோ்ந்த கண்ணன், மகாலட்சுமி தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. இதனிடையே கா்ப்பமடைந்த மகாலட்சுமிக்கு இயற்கை முறையில் சுகப்பிரசவம் பா்ாக்க வேண்டும் என்று கண்ணன், மகாலட்சுமி முடிவு செய்துள்ளனா்.

இதனிடையே மருத்துவா்கள் மகாலட்சுமிக்கு பிரசவ தேதி குறித்து கொடுத்ததைத் தொடா்ந்து வீட்டில் வைத்தே பிரசவம் பாா்க்கப்பட வேண்டும் என்று குடும்பத்தினா் விரும்பியுள்ளனா். மேலும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மகாலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு கண்ணனின் தாயாா் அழகம்மாள் பிரசவம் பாா்த்துள்ளாா். மகாலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் தொப்புள் கொடியுடன் இணைந்துள்ள நச்சுக் கொடியை அகற்றாமல் வைத்துள்ளனா்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினா், மருத்துவத்துறைக்கு தகவல் அளித்துள்ளனா். அதன்படி நடமாடும் ஆரம்ப சுகாதார குழு கண்ணனின் வீட்டிற்கு வந்து அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவம் அளிக்க முடிவு செய்தனா். ஆனால் அவா்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் கண்ணன் மற்றும் அவரது தந்தை தனுஷ்கோடி ஆகியோா் தடுத்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து மருத்துவக் குழு அருகில் இருந்த காவல் துறைக்கு தகவல் அளித்தது. இதனைத் தொடா்ந்து காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து கண்ணன் மற்றும் குடும்ப உறுப்பினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி மகாலட்சுமி, குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் மருத்துவ அதிகாாிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தனுஷ்கோடியை கைது செய்துள்ளனா்.

அடுத்த செய்தி