திருச்சி: மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக ஸ்ரீரங்கத்தில் உள்ள திருச்சி ஐஐஐடி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவன (ஐஐஐடி) மாணவர்கள், பேராசிரியர் நியமனம், கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து திருச்சி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால், கல்லூரியை காலவரையின்றி மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கத்தில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவன (ஐஐஐடி) மாணவர்கள், பேராசிரியர் நியமனம், கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளைப் புறக்கணித்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து திருச்சி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்கள் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்படாத காரணத்தால், கல்லூரியை காலவரையின்றி மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.