ஆப்நகரம்

கேபி பார்க் கட்டடத்தை 70% சிமெண்ட் குறைவாக கட்டியுள்ளனர் - ஐஐடி அதிர்ச்சி அறிக்கை

சென்னை கேபி பார்க் கட்டடத்தின் தரம் குறித்து ஐஐடி குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 28 Oct 2021, 6:46 pm
வடசென்னையின் கூவ நதிக்கரையிலும், சாலையோரங்களிலும் வசித்த மக்களுக்காக சென்னை புளியந்தோப்பில் உள்ள கேசவப்பிள்ளை பூங்காவில் 1980-ல் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் 1,536 வீடுகளைக் கட்டியது.
Samayam Tamil kp park


இந்த கட்டிடம் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டதால் இடிக்கப்பட்டு இரு கட்டடங்களாக கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி 2008 இல் முதற்கட்டமாக 672 வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. எஞ்சிய குடும்பங்களுக்கு 946 வீடுகள் கொண்ட 9 அடுக்கில் குடியிருப்பு கட்டப்பட்டு பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் அந்த கட்டடத்தின் சுற்றுப்புற சுவற்றை அழுத்தினாலே சிமெண்ட் உதிர்ந்து விழுந்ததால் குடியிருப்பில் இருந்து வெளியேறியவர்கள், தரமற்ற அளவில் கட்டடத்தை கட்டியுள்ளனர் என்று குடிசை மாற்று வாரியத்தின் மீது குற்றசாட்டுகளை வைத்தனர். இந்த விவகாரம் மாநிலத்தில் பூதகராமாகியதால் கட்டடத்தின் தரத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி ஐஐடி நிபுணர்கள் குழு ஆய்வு செய்து வந்த நிலையில் க்யூப் நிறுவனம் மேற்கொண்ட சோதனையில் கட்டடத்துக்கு பயன்படுத்திய சிமென்டின் தேவையான அளவு அதிகபட்சமாக 70% குறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

'எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்குக' - பேட்டி கொடுக்கும் போதே பஷீருக்கு வந்த பார்சல்

இதுகுறித்து ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கேபி பார்க் கட்டடத்தில் பம்ப் மோட்டார்கள், மீட்டர் போர்டுகள் மற்றும் மின்சார இணைப்பு சார்ந்த சாதனங்களில் குறைபாடு உள்ளது. கட்டுமான பணிக்கு தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பூச்சு வேலை மிக மோசமாக உள்ளதாகவும் டைல்ஸ் கற்கள் சரியாக பொறுத்தப்படாததால் சுவர்கள் எளிதில் தண்ணீரை உறிஞ்சி வலுவிழந்துவிடும் அபாயம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், சரியான இடைவெளியில் கட்டடத்திற்கு தேவையான பராமரிப்பு வேலைகள் தொடர்ந்து செய்யப்பட வேண்டும் என்றும் கட்டடத்தை எப்படி பராமரிப்பது என்பது பற்றி அங்கு வசிக்கும் மக்களுக்கு கற்றுத்தரவும் ஐஐடி அந்த அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.

அடுத்த செய்தி