ஆப்நகரம்

சிபிஐ விசாரணையில் இருந்து தப்பித்தது சென்னை ஐ.ஐ.டி..!

பேராசிரியர்கள் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TNN 23 Aug 2016, 12:14 am
பேராசிரியர்கள் சட்டவிரோதமாக நியமிக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil iit madras escapes cbi probe into faculty appointments
சிபிஐ விசாரணையில் இருந்து தப்பித்தது சென்னை ஐ.ஐ.டி..!


கடந்த 1988-ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டியில் கணித ஆசிரியராக வசந்தா என்பவர் நியமிக்கப்பட்டார்.1995-ஆம் ஆண்டு கணிதவியல் இணை பேராசிரியருக்கான காலிப்பணியிடங்களுக்கான தேர்வு குறித்து நாளேடுகளில் ஐ.ஐ.டி சென்னை சார்பாக அறிவிப்பு வெளியானது.அறிவிப்பில் கூறியுள்ளபடி அனைத்து தகுதிகள் இருந்தும், வசந்தாவுக்கு இணை பேராசிரியர் பணியிடம் வழங்கப்படாமல்,மற்றொருவருக்கு அந்த பணியிடம் வழங்கப்பட்டது.
இதே போல் 1996-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இணை பேராசியர் பணியிடங்களுக்கான தேர்விலும் வசந்தா புறக்கணிக்கப்பட்டார்.1997-ஆம் ஆண்டு வசந்தாவுக்கு இணை பேராசியராக பதவி உயர்வு வழங்கப்பட்டாலும்,தன்னுடைய அனுபவத்திற்கு தான் பேராசிரியராக பதவி உயர்வு பெற தகுதியானவர் என கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்,

2013-ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகமுத்து,1995-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஐ.ஐ.டி சென்னையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.இதனை எதிர்த்து சென்னை ஐஐடி சார்பில் மனு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மூன்று வருடங்கள் கழித்து தற்போது தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம்,இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தீர்ப்பளித்துள்ளது.

அடுத்த செய்தி