ஆப்நகரம்

இன்னொரு பெண்ணுக்கு இது நடக்கக்கூடாது: ஐஐடி மாணவியின் தந்தை உருக்கம்!

சென்னை ஐஐடியில் மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது தந்தையிடம் மூன்று மணிநேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

Samayam Tamil 16 Nov 2019, 12:40 pm
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் மரணம் தொடர்பாக முறையான விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டும் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ஐஐடி மாணவியின் தந்தை உருக்கம்


ஃபாத்திமா லத்தீஃபின் தந்தை கேட்கும் 10 கேள்விகள்... பதில் சொல்லப்போவது யார்?

சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாத்திமா லத்தீஃபின் தந்தை அப்துல் லத்தீஃப் நேற்று செனையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பல்வேறு சந்தேகங்களை முன்வைத்தார்.

தன் மகள் இப்படி தற்கொலை செய்திருக்க மாட்டாள் என்று உறுதிபடத் தெரிவித்தார். மேலும், சிசிசிடி காட்சிகளை காட்ட மறுக்கின்றனர் என்றும் ஐஐடி மீது குற்றம் சாட்டினார். சென்னையில் உள்ள கேரள சமாஜ்ஜில் தங்கியுள்ள அவரிடம் இன்று (நவம்பர் 16)காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

#JusticeForFatimaLatheef: இது தற்கொலை அல்ல, கொலை: மு.க.ஸ்டாலின் ட்வீட்

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அப்துல் லத்தீஃப், “என்னிடமுள்ள ஆதாரங்கள் தகவல்கள் அனைத்தையும் காவல்துறையினரிடம் சமர்ப்பித்துவிட்டேன். என்ன ஆதாரங்கள் என்பதை கூற முடியாது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை கண்டிப்பாக கைது செய்வோம் என காவல்துறையினர் வாக்குறுதி கொடுத்துள்ளனர்.

மாணவி ஃபாத்திமா லத்திஃப் மரணம்: முதல் முறையாக அறிக்கை வெளியிட்ட ஐஐடி

பாத்திமாவின் தோழி, சகோதரி ஆகியோரிடமும் விசாரணை நடைபெறவுள்ளது. வட மாநிலங்களில் உள்ள கல்லூரிகளில்கூட படிப்பதற்கு இடம் கிடைத்தது. இருப்பினும் சென்னை எமக்கு அருகில் இருக்கிறது என்பதற்காக மட்டுமல்ல, பாதுகாப்பான நகரம் என்பதாலே சென்னை ஐஐடியில் படிக்க தேர்வு செய்தோம். இங்கு சேர்ந்த நான்காவது மாதத்திலேயே எனது மகள் உயிரிழந்துள்ளார். நுழைவுத் தேர்வில் இந்தியளவில் முதல் மதிப்பெண் பெற்று தேர்வானவள் பாத்திமா. அவளது மரணத்துக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக கண்டறிந்து தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இன்னொரு பெண்ணுக்கு இது போன்ற கொடுமை நடைபெறாது. தமிழ்நாடு முதல்வரும், டிஜிபியும் தங்களது சொந்த மகளாக பாவித்து குற்றம் செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்” என்றார்.

மேலும் அப்துல் லத்தீஃப் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனையும் அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

அடுத்த செய்தி