ஆப்நகரம்

அரசுப்பள்ளி மாணவர்களுக்காக அட்டைப் பெட்டியில் மேஜை செய்து அசத்திய ஐஐடி மாணவர்கள்!

சென்னை: கடைகளில் வீணான அட்டைப்பெட்டிகளை வாங்கி, அதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 400க்கும் மேலான மேஜை செய்து சென்னை ஐஐடி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

Samayam Tamil 21 Dec 2018, 5:56 pm
சென்னை: கடைகளில் வீணான அட்டைப்பெட்டிகளை வாங்கி, அதில் அரசுப்பள்ளி மாணவர்களுக்காக 400க்கும் மேலான மேஜை செய்து சென்னை ஐஐடி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.
Samayam Tamil 10


ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் அனுசரிக்கப்படும் தொழில்நுட்ப விழாவான சாஸ்தாவின் ஒரு பகுதியாக, சுற்றுப்புற சுகாதாரக்கேடு இல்லாத கிரமப்புற பள்ளிகளின் வளர்ச்சிக்காக ரீச் எனப்படும் நிகழ்ச்சி துவங்க்கப்பட்டது.

இதில் சில அரசுப்பள்ளிகளுக்கு சென்று பார்த்த போது, மாணவர்கள் தரையில் அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்ததாக ஐஐடி., மாணவர் சவானி குப்தா தெரிவித்தார்.
இதுகுறித்து சவானி கூறுகையில், ‘குறைந்த மதிப்பிலான பொருட்களை கொண்டு, மேஜைகள் செய்ய திட்டமிட்டோம். அதனால் கடைகளில் வீணான அட்டைகளை பெற்று, அதில் மேஜைகள் தயார் செய்தோம். இது மாணவர்களுக்கு ஏற்ப உள்ளதா என்பதை சரிபார்த்த பின் தான் அதை மாணவர்களுக்கு வழங்கினோம்.’ என்றார்.
இந்த திட்டத்துக்கு புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே, விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் ராகேஷ் சர்மா ஆகியோர் இந்த முயற்சிக்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி