ஆப்நகரம்

ஐஐடி தற்கொலைகள்...சென்னை முதலிடம்; அதிர்ச்சியை கிளப்பும் புள்ளி விவரங்கள்!

2010ஆம் ஆண்டில் இருந்து 2019 வரை சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 14 Nov 2019, 1:03 pm
சென்னை: நாடு முழுவதும் உள்ள ஐஐடி வளாகங்களில் நடைபெற்ற தற்கொலை சம்பவங்களில் சென்னையில் இயங்கும் ஐஐடி முதலிடம் வகிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்திஃப் (18). சென்னை ஐஐடியில் எம்.ஏ ஹூமானிட்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் ஸ்டடீஸ் (ஒருங்கிணைந்த) பாடப்பிரிவில் முதலாமாண்டு படித்து வந்த இவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அனைத்து தேர்வுகளிலும் முதலிடம் பிடிக்கும் ஃபாத்திமா, கடந்த மாதம் நடைபெற்ற இண்டர்னல் தேர்வி ஒரே ஒரு பாடத்தில் மட்டும் குறைவான மதிப்பென் பெற்றதாகவும் அதனால் மன உளைச்சலில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை: கேரள முதல்வருக்கு பெற்றோர் மனு

ஆனால், மாணவியின் செல்போனில் பதியப்பட்ட சில குறிப்புகளை சுட்டிக்காட்டிபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தனது மகளுக்கு ஏற்படுத்திய மன உளைச்சல்தான் மரணத்துக்கு காரணம் என தற்கொலை செய்து கொண்ட மாணவி ஃபாத்திமாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக கேளர முதல்வர் பினராயி விஜயனிடம் மாணவியின் பெற்றொர் மனு அளித்துள்ளனர். அத்துடன் பிரதமர் மோடிக்கும் மாணவியின் பெற்றோர் கடிதம் எழுதியுள்ளனர்.

ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை.! சாட்சிகள் மறைக்கப்படுகிறதா.? சென்னைக்கு விரையும் பெற்றோர்..

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாணவியின் உடன் படிப்பவர்கள், ஐஐடி பேராசிரியர் என 25க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், தேவையான ஆவணங்களை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளதாகவும் ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், மாணவியின் செல்போனில் உள்ள குறிப்பின் உண்மைத் தன்மையை கண்டறிய, சைபர் ஆய்வகத்திற்கு மாணவியின் செல்போனை அனுப்ப அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.

ஐஐடி தற்கொலைகள்


இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள ஐஐடி வளாகங்களில் நடைபெற்ற தற்கொலை சம்பவங்களில் சென்னையில் இயங்கும் ஐஐடி முதலிடம் வகிப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, 2010ஆம் ஆண்டில் இருந்து 2019 வரை சென்னை ஐஐடியில் 14 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக காரக்பூர் ஐஐடியில் 13 மாணவர்கள், கவுகாத்தி ஐஐடியில் 8 மாணவர்கள், ரூர்கே ஐஐடியில் 5 மாணவர்கள், டெல்லி ஐஐடியில் 4 மாணவர்கள், கான்பூர் ஐஐடியில் 4 மாணவர்கள், மும்பை, ஹைதராபாத் நகரங்களில் இடங்கும் ஐஐடிகளில் தலா இரண்டு மாணவர்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி