ஆப்நகரம்

பத்ம விபூஷண் விருதை பெற்றாா் இளைய ராஜா

நாட்டின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 20 Mar 2018, 7:13 pm
நாட்டின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் பத்ம விருதுகள் வழங்கும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil Ilayaraja


பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018ஆம் ஆண்டு 84 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இசைஞானி இளையராஜா உள்பட மூன்று பேருக்கு பத்ம விபூஷண் விருதும் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி உள்பட ஒன்பது பேருக்கு பத்ம பூஷண் விருதும் தமிழகத்தை சேர்ந்த நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்பட 72 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்க்பபட்டது.

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்குகிறார். முதல் நபராக தமிழகத்தைச் சோ்ந்த இசைஞானி இளைய ராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

தொடா்ந்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் இளையராஜா உள்பட 6 தமிழா்களுக்கு பத்ம விருது வழங்கப்படுகிறது. இவ்விழாவில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.

முன்னதாக பத்ம விருது வென்றவர்களுக்கு திங்கட்கிழமை இரவு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

அடுத்த செய்தி