ஆப்நகரம்

Ilayaraja 75: இளையராஜா நிகழ்ச்சிக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு- உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Samayam Tamil 30 Jan 2019, 5:36 pm
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள ’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சிக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Samayam Tamil இளையராஜா நிகழ்ச்சி நடக்குமா..?? நடக்காதா.??- தீர்ப்பு ஒத்திவைப்பு


வரும் பிப்.2 மற்றும் 3ம் தேதிகளில் இசையமைப்பாளர் இளையராஜாவை கௌரவிக்கும் விதமாகவும், அவரின் 75- ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடக்கி வைக்கவுள்ளதாக தெரிகிறது.

முன்னதாக, இந்த நிகழ்ச்சி தட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு மற்றும் செயற்குழுவின் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றும், இளையராஜாவுக்கு பாராட்டு விழா என்று கூறி விட்டு, நிதி திரட்ட தாயாரிப்பாளர் சங்கம் முயற்சிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு முறையிடப்பட்டது.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பதிலளித்த விஷால் தரப்பினர், சங்க உறுப்பினர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க நிதி திரட்டவே இளையராஜா நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், அனைத்து உறுப்பினர்களையும் கலந்தாலோசித்தே முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மேலும், இதற்காக ஓய்.எம்.சி.ஏ மைதானத்திற்கு ரூ. 35 லட்சமும், இளையராஜாவிற்கு ரூ. 25 லட்சமும் கொடுக்கப்பட்டதாக தகவல் கூறினர். 2017 - 18-ஆம் ஆண்டு கணக்கு வழக்குகள் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி