ஆப்நகரம்

சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

திண்டுக்கல்லில் தமிழக அரசால் தடை செய்யபட்ட கேரி பை தயாரிக்கும் குடோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் கேரி பேக்குகளைப் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Samayam Tamil 23 Feb 2019, 8:43 am
திண்டுக்கல்லில் தமிழக அரசால் தடை செய்யபட்ட கேரி பை தயாரிக்கும் குடோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் கேரி பேக்குகளைப் பறிமுதல் செய்து மாநகராட்சி அலுவலர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Samayam Tamil plastic ban


தமிழக அரசு பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்தக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் காவல்துறையினர், பள்ளிகள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு சங்கங்கள் என பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் பேரணி, கருத்தரங்கம் மூலம் அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் பழனி சாலையில் தனியார் குடோனில் கேரிபேக் விற்பதாக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று மாலை சுகாதார ஆய்வாளர்கள் குடோனில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வண்ணக் கலர்களில் கேரி பேக் 1 டன் மேலே இருந்தது. இதன் மதிப்பு 3 லட்சம் ஆகும். உடனே மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மதிவாணன், கேரி பேக் தயாரிக்கும் கம்பெனியை பார்வையிட்டு அனைத்து மிஷின்களையும் சீல் வைத்தார்.

உடனே மாநகராட்சி அலுவலர்கள் கேரி பேக்கை பறிமுதல் செய்து கம்பெனி நடத்தி வந்த சுப்பிரமணி என்பவருக்கு 25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இந்த சோதனையில் திண்டுக்கல் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ஜெபாஸ்டின், பாலமுருகன், முருகையா, லாவண்யா, கீதா உள்பட பலர் சோதனையில் இருந்தனர்.

அடுத்த செய்தி