ஆப்நகரம்

மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு டிச.15க்கு ஒத்திவைப்பு

மாறன் சகோதரா்கள் மீதான் பி.எஸ்.என்.எல். இணைப்பு முறைகேடு வழக்கை வருகிற 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TOI Contributor 11 Dec 2017, 11:00 pm
மாறன் சகோதரா்கள் மீதான் பி.எஸ்.என்.எல். இணைப்பு முறைகேடு வழக்கை வருகிற 15ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil illegal telephone exchange case
மாறன் சகோதரர்கள் மீதான வழக்கு டிச.15க்கு ஒத்திவைப்பு


தயாநிதிமாறன் தொலைத் தொடா்புத் துறை அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தொிவிக்கப்பட்டது.

மேலும் உச்சநீதிமன்றத்தில் இது தொடா்பாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் அது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரும் மனுவுக்கு சிபிஐ கடுத் எதிா்ப்பு தொிவித்தது.

அதன்மீது வாதத்தை முன்வைக்க வேண்டடியிருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க மாறன் சகோதரா்கள் தரப்பில் கோாிக்கை விடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை இன்றைய தினத்திற்கு (டிச.11) ஒத்திவைத்தாா். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மாறன் சகோதரா்கள் இன்று ஆஜராகாததால் வழக்கு விசாரணை வருகிற வெள்ளிகிழமைக்கு ஒத்திவைத்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்க கோரும் மாறன் சகோதரா்களின் கோாிக்கை தொடா்பாக வருகிற 15ம் தேதி விசாரிக்கப்படும் என்று தொிகிறது.

அடுத்த செய்தி