ஆப்நகரம்

மாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு

மாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.

TOI Contributor 3 Apr 2017, 1:19 pm
சென்னை: மாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை சிபிஐ நீதிமன்றம் ஒத்திவைத்திருக்கிறது.
Samayam Tamil illegal telephone exchange case marans appear before cbi court in chennai
மாறன் சகோதரர்கள் மீதான பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு


காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. தனது பதவியின் அதிகாரத்தை பயன்படுத்தி 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளையும், 19 செல்போன் இணைப்புகளையும் முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இதனிடையே, இந்த வழக்கில் தயாநிதி மாறன் மற்றும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் மீது சிபிஐ கடந்த ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதற்கு, நேரில் ஆஜராகி பதிலளிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகிய இருவரும் இன்று சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்களுடன் தயாநிதிமாறனின் செயலாளர் கவுதமன், சன்டிவி ஊழியர்கள் கண்ணன், ரவி, பிஎஸ்என்எல் அதிகாரிகள் பிரம்மநாதன், வேலுச்சாமி ஆகியோரும் வந்தனர்.

ஆனால், வழக்கின் விசாரணை இன்று நடைபெறாமல் மே 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அடுத்த செய்தி