ஆப்நகரம்

தமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதை திமுக தான் - தமிழிசை!

தமிழகத்தில் ஆக்கபூர்வமான அரசியலை கொண்டு செல்ல நினைக்கிறோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

Samayam Tamil 2 Jun 2019, 1:21 pm
தமிழகத்தில் ஆக்கபூர்வமான அரசியலை கொண்டு செல்ல நினைக்கிறோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
Samayam Tamil தமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதை திமுக தான் - தமிழிசை!
தமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதை திமுக தான் - தமிழிசை!


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் பகுதியில் நடைபெறும் இலவச மருத்துவ முகாமினை துவங்கி வைக்க இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனை அக்கட்சியினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் தனது 58வது பிறந்தநாளை கட்சியினருடன் சேர்ந்து விமான நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆக்கபூர்வமான அரசியலை கொண்டு செல்ல நினைக்கிறோம். தூத்துக்குடி மக்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தால் பணியாற்றி இருப்பேன். இல்லை என்றாலும் பனியாற்றுவேன்.

தனது 58வது பிறந்தநாளை கட்சியினருடன் சேர்ந்து கேக் வெட்டிய கொண்டாடிய தமிழிசை


தமிழகத்தில் சாராய ஆலை வைத்திருப்பதை திமுக தான். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னவர்களும் அவர்கள்தான். ஆனால் கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என்று ஆட்சியருக்கு மனு கொடுத்துள்ளார். தமிழகத்தில் நடக்ககூடிய ஸ்டெர்லைட் உட்பட பெரிய பிரச்சனைகளுக்கு திமுகதான் காரணம்.

தூத்துக்குடி மக்கள் இரண்டரை லட்சம் பேர் வாக்கு அளித்துள்ளனர் இன்னும் வாக்களிக்க நினைத்தனர். ஆனால் கனிமொழி நான், மிரட்டி ஓட்டு வாங்கினேன் என்கின்றார். நான் யாரையும் மிரட்டுபவல் அல்ல என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி