ஆப்நகரம்

Cyclone Gaja: கஜா புயல் புதிய அறிவிப்பு: சென்னைக்கு ஆபத்து நீங்கியது!

சென்னை : கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 14 Nov 2018, 3:42 pm
சென்னை : கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil gaja


முன்னதாக சென்னை - நாகை இடையே கஜா புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வானிலை மையம் வெளியிட்ட புதிய அறிவிப்பில் கடலூர் - பாம்பன் இடையே புயல் கரையை கடக்கும் என தெரிவித்துள்ளது.

70 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த கஜா புயல் தற்போது வேகம் அதிகரித்து 10கி.மீ வேகத்தில் வந்து கொண்டிருக்கின்றது. இந்த புயல் சென்னை கிழக்கே 490 கி.மீ தெலைவிலும். நாகைக்கு 580 கி.மீ தெலைவிலும் உள்ளது.

இன்று இரவு 11.30 மணிக்கு தீவிர புயலாக மாறக்கூடும் என்றும், நாளை மாலை புயல் கரையை கடக்கலாம் என்றும், கரையை கடக்கும் போது 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக சென்னை,கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர்,புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும். மற்ற உள் மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு பாதிப்பு இல்லை :இதன் காரணமாக சென்னையில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

அடுத்த செய்தி