ஆப்நகரம்

தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதியை தமிழக அரசு நீட்டித்துள்ளது

Samayam Tamil 27 Sep 2020, 4:48 pm
தமிழகத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் தற்போது 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 92,000 சேர்க்கை இடங்கள் உள்ளன. பொதுவாக மேற்கண்ட கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் சேர விரும்பும் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிப்பார்கள். இதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல வேண்டியதிருக்கும்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுப்படி புதிய முயற்ச்சியாகவும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.in, www.tndceonline.org என்கிற இணையதளங்களில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் 72 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களை நிரப்பிடும் வகையில் தொடர்ந்து சேர்க்கை நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் திறக்கப்படாது: முடிவை மாற்றிய தமிழக அரசு!

இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்கள் உடனடியாக தங்கள் அசல் சான்றிதழ்களுடன் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேலும், நிரப்பப்படாமல் உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களுக்கு வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை சேர்க்கையைக் கல்லூரிகள் நடத்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி