ஆப்நகரம்

Anna University: பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் எப்போது? வெளியானது முக்கிய அறிவிப்பு!

நடப்பு செமஸ்டர் தேர்வு நடத்தப்படும் தேதி தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 24 Dec 2020, 9:41 am
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மாணவ, மாணவிகளின் கல்வி முறையே மாறிவிட்டது. வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வாயிலாக பாடம் கற்று வருகின்றனர். மேலும் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, அவர்களை கண்காணிக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்பம், பிரத்யேக மென்பொருள் என வருங்கால கல்வி முறையை புரட்டி போட்டிருக்கிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க மாநில அரசு பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தியது.
Samayam Tamil Anna University


ஆனால் தொடரும் வைரஸ் பரவல், பெற்றோர்கள் எதிர்ப்பு என கல்வி நிலையங்கள் திறப்பு தொடர்ந்து தள்ளிபோடப்பட்டு வருகிறது. இறுதியாண்டு மாணவர்கள் மட்டும் கல்லூரிகளுக்கு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி சென்னை ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

தமிழகத்தில் புதிய வகை வைரஸ்; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

உடனே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கோவிட்-19 கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு பற்றி மாநில அரசு ஆலோசனை நடத்தியது. அதாவது பொங்கல் விடுமுறைக்கு பிறகு மாணவர்களை நேரடியாக பள்ளி, கல்லூரிகளுக்கு வரவழைக்க ஏற்பாடு செய்யலாம் என்று திட்டமிடப்பட்டது.

அதற்குள் புதிய வகை கொரோனா வைரஸ் குறித்த செய்தி பரவத் தொடங்கியுள்ளது. இது கொரோனா வைரஸை விட அதிக வேகத்தில் பரவும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை கடுமையாக தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று சொல்லப்பட்டாலும், பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை தான் ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் போகும் ரஷ்மிகா: கார்த்திக்கு செஞ்சத அவருக்கு செஞ்சுடாதீங்கனு சொல்லும் ரசிகர்கள்
எனவே பொங்கலுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு என்பதற்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இந்த சூழலில் பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வு வரும் ஜனவரி மாதம் ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று பிரித்து தேர்வை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் செமஸ்டர் தேர்விற்கான தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி