ஆப்நகரம்

ஊரடங்கில் முக்கிய தளர்வு: தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!

போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை கருத்தில் கொண்டு இன்று முதல் பொது நூலகங்கள் திறக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 24 Jul 2021, 10:33 am
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 36ஆயிரம் என்ற அளவில் இருந்து தற்போது 1800 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்துள்ளதை கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசு முக்கிய தளர்வுகளை அறிவித்து வருகிறது.
Samayam Tamil tn libraies open


ஒவ்வொரு வாரமும் அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி தளர்வுகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் வெளியிட்ட அறிவிப்பில் இரு வாரங்களுக்கும் சேர்த்து தளர்வுகள் அறிவித்தார்.
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் வசதி: புதிய அறிவிப்பு!
பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், மதுபானக் கூடங்கள், உயிரியல் பூங்காக்கள் என சில பணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகி வரும் நிலையில் நூலகங்களும் மூடபப்ட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் 100 சதவீதம் இயங்கி வரும் நிலையில் பொது நூலகத் துறை கீழ் இயங்கும் நூலகங்களை திறக்க வலியுறுத்தி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் தமிழ்நாடு அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள நூலகங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு: வகுப்பறைகளை ஆய்வு செய்த அதிகாரி!
நூலகங்கள் திறப்பு என்பது பள்ளிகள் திறப்பிற்கான முன்னோட்டம் என அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது.

அடுத்த செய்தி