ஆப்நகரம்

கடலுக்கு செல்ல வேண்டாம் : மீனவர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு

மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 12 Dec 2018, 12:06 am
மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
Samayam Tamil fishermen


வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடல் கொந்தளிப்பாக இருக்கும், கன மழைக்கு வாய்ப்பு இருப்பதால் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கஜா புயல் தாக்கத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகள், சில கடலோர மாவட்ட மீனவர்கள் இருக்கும் நிலையில், மீண்டும் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தமிழகம் பெற வேண்டிய மழையை விட குறைவாக பெற்றுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி