ஆப்நகரம்

பள்ளி மாணவனை வெளுத்து வாங்கிய ஆசிரியர்: வீடியோ எடுத்த மாணவர்களால் பரபரப்பு!

ஆரணி அருகே பள்ளி மாணவனை வெளுத்து வாங்கும் ஆசிரியர் அதனை வகுப்பறையிலேயே செல்போன் மூலம் படம் பிடித்து சக மாணவர்கள் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Feb 2019, 9:01 pm
ஆரணி அருகே பள்ளி மாணவனை வெளுத்து வாங்கும் ஆசிரியர் அதனை வகுப்பறையிலேயே செல்போன் மூலம் படம் பிடித்து சக மாணவர்கள் வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil arani


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பத்தியாவரம் சூசைநகரில் உள்ள சென்.ஜோசப் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு நிதி உதவி பெறும் பள்ளி இந்த பள்ளி சுமார் 50 ஆண்டுக்கு மேலாக இயங்கி வருகின்றன. தலைமையாசிரியர் உட்பட 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் சுமார் 1375 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மேலும் வகுப்பறையில் ஒரு மாணவனை ஆசிரியர் கையால் கன்னத்தில் பளார் பளார் என்று வெளுத்து வாங்கி கொண்டிருந்தார். அப்போது அதனை சக மாணவர்கள் சிலர் செல்போன் மூலம் படம் பிடித்துள்ளனர்.

மேலும் இதனை கவனிக்காத ஆசிரியர் மாணவனை ஓருவனை தொடர்ந்து அடித்து வந்துள்ளார். தற்போது சென்.ஜோசப் பள்ளி மாணவனை வெளுத்து வாங்கும் ஆசிரியர் வீடியோவை வெளியிட்டுள்ளதால் பரபரப்பு.

படிக்கின்ற மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று கூறியும் சில மாணவர்கள் வகுப்பறையில் செல்போன் பயன்படுத்த போது மாணவனை ஆசிரியர் வெளுத்து வாங்கும் வீடியோவை படம் பிடித்து வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்த செய்தி