பாஜக சார்பில் சென்னை நடந்த கோட்டையை நோக்கிய பேரணியில் ஏராளமான சீனியர் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் பாஜக இளைஞர் அணி சார்பில் கோட்டையை நோக்கிய பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும், பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்து பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் மும்பையைச் சேர்ந்த பாஜக எம்.பி. பூனம் மகாஜன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணிக்காக பல்வேறு ஊர்களிலிருந்தும் தொண்டர்களை திரட்டி வந்திருந்தனர். அப்படியிருந்தும் அந்தப் பேரணியில் அவ்வளவாக கூட்டம் இல்லை.
பேரணியை நடத்தியது என்னவோ பாஜகவின் இளைஞர் அணி தான். ஆனால், பேரணிக்கு வந்தவர்கள் யாரும் இளைஞர் அணி இல்லை. எல்லாருமே சீனியர் தொண்டர்கள் தான். மற்ற கட்சிகளைப் போன்று நாமும் ஏதாவது பேரணி நடத்தியாக வேண்டும் என்ற போட்டிக்குத் தான் இந்த பேரணி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பேரணி முடிந்ததும், அங்கு சேர்ந்திருந்த குப்பைகளை அவர்களாகவே அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் பாஜக இளைஞர் அணி சார்பில் கோட்டையை நோக்கிய பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்றும், பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்து பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் மும்பையைச் சேர்ந்த பாஜக எம்.பி. பூனம் மகாஜன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணிக்காக பல்வேறு ஊர்களிலிருந்தும் தொண்டர்களை திரட்டி வந்திருந்தனர். அப்படியிருந்தும் அந்தப் பேரணியில் அவ்வளவாக கூட்டம் இல்லை.
பேரணியை நடத்தியது என்னவோ பாஜகவின் இளைஞர் அணி தான். ஆனால், பேரணிக்கு வந்தவர்கள் யாரும் இளைஞர் அணி இல்லை. எல்லாருமே சீனியர் தொண்டர்கள் தான். மற்ற கட்சிகளைப் போன்று நாமும் ஏதாவது பேரணி நடத்தியாக வேண்டும் என்ற போட்டிக்குத் தான் இந்த பேரணி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பேரணி முடிந்ததும், அங்கு சேர்ந்திருந்த குப்பைகளை அவர்களாகவே அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.