ஆப்நகரம்

திருவண்ணாமலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் முதல்வர் திறப்பு!!

திருவண்ணாமலையில் இன்று நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் , ஜெயலலிதாவின் சிலைகளை திறந்து வைத்தார்.

TNN 29 Jul 2017, 6:06 pm
திருவண்ணாமலையில் இன்று நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆர் , ஜெயலலிதாவின் சிலைகளை திறந்து வைத்தார்.
Samayam Tamil in centenary function of mgr chief minister edappadi k palaniswami inaugurates the statue of jayalalithaa and mgr
திருவண்ணாமலையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் முதல்வர் திறப்பு!!


இதற்கு முன்பாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் முதல் நிகழ்வாக மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் புகைப்படக் கண்காட்சி தொடங்கியது. இந்தக் கண்காட்சியை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடக்கி வைத்தார்.

இந்த விழாவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் தேர்வு பயத்தைப் போக்க திங்கள் கிழமை சிறப்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றார். மேலும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு, விபத்துக் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்படும் என்றும் கூறினார்.



in centenary function of mgr chief minister edappadi k. palaniswami inaugurates the statue of jayalalithaa and mgr

அடுத்த செய்தி