ஆப்நகரம்

நெத்தில பொட்டு வச்சது தப்பா? மூதாட்டிக்கு பென்சன் மறுப்பு!

கணவர் மரணத்திற்குப் பிறகு நெத்தியில் பொட்டு வைத்ததால் மூதாட்டிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்ததாக புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 15 Apr 2018, 9:28 pm
கணவர் மரணத்திற்குப் பிறகு நெத்தியில் பொட்டு வைத்ததால் மூதாட்டிக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்ததாக புகார் எழுந்துள்ளது.
Samayam Tamil sticker


சென்னையைச் சேர்ந்தவர் 85 வயது நிரம்பிய ரமேஷ். கடந்த 1993ம் ஆண்டு முதல் துறைமுகத்தில் பணியாற்றி வந்த அவர் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்தார். இதையடுத்து, கணவரின் மறைவுக்குப் பிறகு அவரது மனைவி தேவிக்கு (77) வரவேண்டிய ஓய்வூதியத்திற்காக மகன் மற்றும் மருமகளுடன் ஓய்வூதியம் தொடர்பான அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அதன் பிறகு அதிகாரிகள் கேட்ட அடையாள சான்றை கொடுத்துள்ளனர். அதிலுள்ள புகைப்படத்தை பார்த்த அதிகாரி, மூதாட்டியையும் பார்த்துள்ளார். இதையடுத்து, தேவியின் புகைப்படத்தை வாங்க மறுத்துள்ளார்.

காரணம் கேட்ட போது, புகைப்படத்தில் தேவி பொட்டு வைத்திருந்ததாகவும், பொட்டு இல்லாத புகைப்படத்தைத் தான் ஏற்க முடியும் என்று கூறிவிட்டார். கணவரின் மரணத்திற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதால், பொட்டு இல்லாத புகைப்படம் எடுப்பதற்கு தேவியை மறுப்பு கூறியதாக தேவியின் மருமகள் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து மற்றொரு நாள் ஓய்வூதியத்திற்கான ஆவணங்களை கொடுத்ததோடு, புகைப்படத்திற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரி பற்றியும் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி