ஆப்நகரம்

நெடுவாசலில் கொந்தளிப்பு... மெரினாவில் போலீஸ் குவிப்பு!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட திட்டமிட்டுள்ளதாக ’வாட்ஸ் ஆப்’ தகவல் வேகமாக பரவி வருகிறது.

TOI Contributor 29 Jul 2017, 2:26 pm
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட திட்டமிட்டுள்ளதாக ’வாட்ஸ் ஆப்’ தகவல் வேகமாக பரவி வருகிறது.
Samayam Tamil in chennai marina huge number of police deployed they have been taken to supervise the struggle against the people of neduvasal
நெடுவாசலில் கொந்தளிப்பு... மெரினாவில் போலீஸ் குவிப்பு!


புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கிராம மக்கள், கடந்த ஏப்ரல் 12ல் இரண்டாம் கட்டமாக போராட்டத்தை துவக்கினர். சுமார் 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள், பெண்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். இருந்தாலும் இவர்களை அரசு கண்டுகொள்வதாக இல்லை.

ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல நெடுவாசல் மக்களுக்காக மாணவர்கள் போராட முடிவு செய்துள்ளதாக தகவல் ஒன்று வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவிவருகிறது. இதனிடையே மெரினா கடற்கரை சாலையில் 200க்கும் மேற்பட்டட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

மீண்டும் ஜல்லிக்கட்டு போராட்டம் போல நடைபெறவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக ஏகப்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

In Chennai marina huge number of police deployed. They have been taken to supervise the struggle against the people of Neduvasal.

அடுத்த செய்தி