ஆப்நகரம்

கருவில் மாற்றுத்திறனாளி குழந்தை: பயத்தில் வளைகாப்புக்கு முன் கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை!

தர்மபுரி மாவட்டத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கயிருந்த நிலையில் கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Nov 2018, 7:25 am
தர்மபுரி மாவட்டத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கயிருந்த நிலையில் கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil egnan


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள நீர்குந்தி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சங்கீதா (20). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து சங்கீதா 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் கருவில் இருப்பது என்ன குழந்தை என்று பார்க்கும் ஆர்வத்தில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கருவில் இருப்பது மாற்றுத்திறனாளி குழந்தை போன்று தெரிந்துள்ளது. இதன் காரணமாக தொடர்ந்து மனமுடைந்து காணபட்ட சங்கீதாவிற்கு இன்று வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கயிருந்தது.

இந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரை மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி