ஆப்நகரம்

ஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி!!

திமுகவுடன் கூட்டணியில் உள்ளதால், காங்கிரசின் நிலை பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Samayam Tamil 22 Jan 2020, 12:17 am
எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில், இன்று ( செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசியது:
Samayam Tamil ஐயோ காங்கிரஸ் பாவம்... பரிதாபப்படும் முதல்வர் பழனிசாமி!!


கூட்டணி கட்சிகளை எந்த காலத்திலும் திமுக மதித்தது கிடையாது. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால், நூற்றாண்டுகளை கடந்த காங்கிரஸ் கட்சி தற்போது பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

சாதாரண நபர்கள் திமுகவில் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தற்போது அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்ஜிஆர் சுடப்பட்ட வழக்கில் வாதாடியவர்... முன்னாள் தலைமை நீதிபதி காலமானார்..! ஸ்டாலின் இரங்கல்...

ஆனால், அதிமுகவில் உள்ள அனைவரும் உயர்ந்த இடத்திற்கு வர இயலும். இங்கு ஒரு பழனிசாமி அல்ல. ஓராயிரம் பழனிசாமிகள் உள்ளனர்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் அதிமுக ஆட்சிக்கு மக்கள் நற்சான்றிதழ் அளித்துள்ளனர்.

அதிமுக கொடியில் அண்ணாதுரையின் உருவத்தை பொருத்தியவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்கள் மூலம் ஆக்கப்பூர்வமான கருத்துகளை அவர் சமுதாயத்துக்கு வழங்கினார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பற்றி அப்படியொரு பேச்சு; சிரிப்பலையில் மூழ்கிய மாணவர்கள்!

தற்போது ஏதேதோ தலைப்புகளில் சினிமாக்கள் வருகின்றன. ஆனால் அத்திரைப்படங்கள் எதுவும் மனதில் நிற்பதில்லை என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.

அடுத்த செய்தி