சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மழை பெய்ய வேண்டி கணபதி ஹோமத்துடன் யாக பூஜை நடந்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மழை பெய்ய வேண்டி கணபதி ஹோமத்துடன் யாக பூஜை நடந்துள்ளது. கோயில் வளாகத்தில் யாக குண்டம் வார்க்கப்பட்டு வேத விற்பனர்கள் வேதம் ஓதி மழை பெய்ய வேண்டி பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து, பக்தர்கள், பொதுமக்கள் வருண பகவான் சுவாமிக்கு மாலை அணிவித்து வணங்கி வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பண்ணாரி அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை நடத்தப்பட்டது. மழை பெய்து விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் யாக பூஜை நடந்ததாக இந்து அறநிலைய துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மழை பெய்ய வேண்டி கணபதி ஹோமத்துடன் யாக பூஜை நடந்துள்ளது. கோயில் வளாகத்தில் யாக குண்டம் வார்க்கப்பட்டு வேத விற்பனர்கள் வேதம் ஓதி மழை பெய்ய வேண்டி பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து, பக்தர்கள், பொதுமக்கள் வருண பகவான் சுவாமிக்கு மாலை அணிவித்து வணங்கி வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பண்ணாரி அம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மழை பெய்ய வேண்டி பிரார்த்தனை நடத்தப்பட்டது. மழை பெய்து விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் யாக பூஜை நடந்ததாக இந்து அறநிலைய துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.