ஆப்நகரம்

கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை காரில் கடத்தல்!

கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 1 Dec 2018, 12:18 am
கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil kumbakonam


கும்பகோணம் லால் பகதூர் சாலையில் ஏ.ஜே.சி மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு 3 மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காயத்ரி (31) என்பவர் கணக்கு பாடம் எடுக்கும் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இன்று மாலை 5 மணிக்கு பள்ளியை விட்டு மோட்டார் சைக்கிளில் காயத்ரி அண்ணாநகரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பும்போது மகாமககுளம் அருகே நீல நிற குவாலிஸ் கார் காயத்ரி சென்ற வாகனத்தில் மோதவும் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது காரில் இருந்த மர்ம நபர்கள் காயத்ரியை காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடத்தப்பட்ட ஆசிரியையின் குடும்பத்தினர் கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் விசாரனையை தீவிரபடுத்தியுள்ளனர். கடத்தப்பட்ட ஆசிரியைக்கு திருமணம் ஆகவில்லை என்றும், காயத்ரியின் தாய் மீரா என்றும், தந்தை கிரிராசன் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆசிரியை கடத்தப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி