ஆப்நகரம்

நீளம் தாண்டுதலில் அரியலூரைச் சேர்ந்த வீரர் அரவிந்த் தங்கப்பதக்கம்!

தேசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Samayam Tamil 20 Jan 2019, 6:33 pm
தேசிய அளவிலான நீளம் தாண்டுதல் போட்டியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த உட்கோட்டை கிராமத்தை சேர்ந்த அரவிந்த் புனேயில் நடைபெற்ற தேசிய அளவிலான மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த அரவிந்த் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களையும், பரிசுகளையும் வென்ற இவர் தனது பயிற்சியாளர் நாகராஜன் மற்றும் தனது தாய், தந்தை தான் வெற்றி பெற உறுதுணையாக இருந்ததாக தெரிவித்தார்.

மேலும் எதிர் வரும் ஆசியவிளையாட்டு போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதே தனது குறிக்கோள் என தெரிவித்தார். தங்கம் வென்ற செய்தி அறிந்த உட்கோட்டை கிராம மக்கள் அரவிந்திற்கு மரியாதை செய்து வெகுவாக பாராட்டினார்.

அடுத்த செய்தி