ஆப்நகரம்

பூரி கடற்கரையில் 205 கிமீ வேகத்தில் ஃபானி புயல் கரையை கடக்கும்!

ஒரிசா மாநிலம், 450 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள ஃபானி புயலானது நாளை பிற்பகலில் மணிக்கு 205 கிமீ வேகத்தில் பூரி கடற்கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 May 2019, 12:12 pm
ஒரிசா மாநிலம், 450 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள ஃபானி புயலானது நாளை பிற்பகலில் மணிக்கு 205 கிமீ வேகத்தில் பூரி கடற்கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Fani 2


வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த சில தினங்களுக்கு முன் புயலாக மாறியது. தற்போது ஒரிசா மாநிலம் 450 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ள ஃபானி புயலானது நாளை பிற்பகலில் மணிக்கு 205 கிமீ வேகத்தில் பூரி கடற்கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு பலத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு ரயில் சேவையும் இயக்கப்படுகிறது.

ஃபானி புயலானது கரையைக் கடக்கும் பொழுது ஆந்திரா கடலோர பகுதிகளான விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி