ஆப்நகரம்

இனி இரண்டு நாட்களுக்கு யாரும் குடிக்க முடியாது!

ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

TNN 19 Dec 2017, 5:06 pm
ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் மூடப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil in rk nagar all tasmac shop will be closed for two days from now
இனி இரண்டு நாட்களுக்கு யாரும் குடிக்க முடியாது!


தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவரது தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பி.ஜே.பி-யின் கரு.நாகராஜன், டி.டி.வி. தினகரன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில், இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ளது. இதையடுத்து, நாளை மறுநாள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று மாலை 5 மணி முதல் வரும் 21ம் தேதி மாலை வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

In RK Nagar All Tasmac shop will be closed for two days from now.

அடுத்த செய்தி