ஆப்நகரம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சரியில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

TNN 14 Oct 2016, 11:28 am
தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சரியில்லை என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil in tamilnadu law and order is not good m k stalin
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை: ஸ்டாலின் குற்றச்சாட்டு


சென்னையில் கொளத்தூரில் செயல்படும் 7 நூலகங்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து மேலும், 4 நூலகங்களை பார்வையிட்டு அங்கு ஆய்வு நடத்தினர். பின்னர் நூலக வாசகர்கள் மற்றும் நூலக அதிகாரிகளிடம் அங்குள்ள குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் விடுத்த பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளை ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேலும், வெளியிட்டுள்ள அறிக்கையில், கிண்டியில் கல்லூரி மாணவிகள் 3 பேர் தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தன்னை முழுமையாக பாதித்து விட்டது. அதனை கேட்டு பெருந்துயர் அடைந்தேன் என்று கூறியுள்ளார். இது போன்று கட்டுப்பாட்டை இழந்து செயல்படும் வாகனங்களால், பொதுமக்களுக்கு விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை போக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி