ஆப்நகரம்

சர்வாதிகாரி போல் செயல்படும் மோடி: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!

உலகில் இருக்கும் அனைத்து சர்வாதிகாரிகளும் மாற்று கருத்து உடையவர்களை சித்திரவதை செய்வது போன்று தான், நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில், மோடியும் நடந்து கொள்கிறார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Samayam Tamil 13 Jun 2022, 3:03 pm
நேஷனல் ஹெரால்டு நாளேடு வழக்கில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
Samayam Tamil KS Alagiri


இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை, விஜயதாரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி மத்திய அரசை கண்டித்து, சாஸ்திரி பவனை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும், காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது. அதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, “இந்திய ஜனநாயகத்திற்கு இன்று ஒரு கரும் புள்ளி. காங்கிரஸ் தன்னுடைய 100 ஆண்டுகால பத்திரிகையை காப்பாத்த போராடி வருகிறது.
பள்ளிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்: இந்த விஷயத்தில் தாமதம் கூடாது!
இவ்விவகாரத்தில் பண பரிமாற்றம் என எதுவும் நடைபெறவில்லை, உரிமைகள் மட்டுமே மாற்றப்பட்டு உள்ளது, தவறு எதுவும் நடைபெறவில்லை. இதனை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு உள்ளது. அதேபோல் ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது, உரிமையே இல்லாமல் அமலாக்கத்துறை இதனை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

உலகில் இருக்கும் அனைத்து சர்வாதிகாரிகளும் மாற்று கருத்து உடையவர்களை இப்படித்தான் சித்திரவதை செய்தனர். அதனை தான் மோடி செய்கிறார். காங்கிரஸ் இதிலிருந்து மீளும்” என்று கூறினார்.
மீண்டும் அதிரடி பணியிட மாற்றம்: தலைமைச் செயலாளர் உத்தரவு!
இதன் பின் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த காவல்துறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அடுத்த செய்தி