ஆப்நகரம்

திருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன், 3 வயது குழந்தை பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவனும், 3 வயது குழந்தையும் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Oct 2018, 11:51 am
திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவனும், 3 வயது குழந்தையும் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil child


தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 174 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், திருவள்ளூர் அருகிலுள்ள சின்ன எடப்பாளையத்தைச் சேர்ந்தவர் பூ வியாபாரி கணேஷ். இவரது மகன் நிதீஷ்வீரா (7). மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிதீஷ்வீரா திருவள்ளூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். எனினும், நேற்று முன்தினம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதே போன்று, திருவள்ளூர் அடுத்துள்ள கடம்பத்தூர் பகுதியிலுள்ள அதிகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புகைப்பட கலைஞர் கார்த்திக். இவரது 3 வயது மகள் அஸ்விதா. இவரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளாள்.

இதே போன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 30 பேர் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி