ஆப்நகரம்

தமிழகத்தில் 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் 6 மாவட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட 19 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

SamayamTamil 19 Feb 2018, 9:40 pm
தமிழகத்தில் 6 மாவட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்பட 19 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil including 6 district ias officials 19 officials changed in tamilnadu
தமிழகத்தில் 19 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம்!


தமிழகத்தில் சிவகங்கை, தருமபுரி, கடலூர், கரூர், கன்னியாகுமரி மற்றும் அரியலூர் ஆகிய 6 மாவட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 19 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

சிவகங்கை மாவட்ட ஐஏஎஸ் அதிகாரி மலர்விழி – தருமபுரி மாவட்டத்தின் அதிகாரியாகவும், கடலூர் மாவட்ட அதிகாரி பிரசாந்த் மு.வடநேரே – கன்னியாகுமரி மாவட்ட அதிகாரியாகவும், மீன்வளத்துறை இயக்குனர் தண்டபாணி கடலூர் மாவட்ட ஐஏஎஸ் அதிகாரியாகவும், தொல்லியல்துறை இயக்குனர் அன்பழகன் கரூர் மாவட்ட ஐஏஎஸ் அதிகாரியாகவும், சென்னை சுகாதார இயக்குனர் விஜயலட்சுமி அரியலூர் மாவட்ட ஐஏஎஸ் அதிகாரியாகவும், வணிகவரித்துறை இயக்குனர் மரியம் பல்லவி பால்தேவ் தேனி மாவட்ட அதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர,

லட்சுமி ப்ரியா – சென்னை வணிகவரித்துறை இணை கமிஷனர்
விவேகானந்தன் – புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர்
பழனிசாமி – தொழில்நுட்ப கலவி இயக்குனர்
சுப்பையன் – தோட்டக்கலைத்துறை
சத்தியமூர்த்தி – போக்குவரத்துத்துறை அமைச்சர்
வெங்கடாஜலம் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர்
கோவிந்தராஜ் – ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர்
மேகநாத ரெடி – நிலநிர்வாக ஆணையர்
தயானந்த் கட்டாரியா – தலைவர், பவர் பைனான்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகம்
மோகன் – பொதுப்பணித்துறை துணை செயலர்

அடுத்த செய்தி