ஆப்நகரம்

தமிழகத்தில் 74 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை!

தமிழகத்தில் 74 இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 29 Jan 2019, 10:53 am
தமிழகத்தில் 74 இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil IT


தமிழகத்தில் 74 இடங்களில் உள்ள வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் வந்ததைத் தொடர்ந்து சென்னையில் 72 இடங்களிலும், கோயம்புத்தூரில் 2 இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில், ஜி ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி வணிக நிறுவனங்கள் (ஜவுளிக்கடை, நகைக்கடை, சூப்பர் மார்க்கெட்), யோகரத்தினம் பொன் துரைக்கு சொந்தமான சரவணா ஸ்டோர்ஸ் ஆகியவை உள்ளிட்ட 74 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் வந்ததைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.



இதற்கு முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹோட்டல்சரவணன பவன், கிராண்ட்ஸ்வீட் உள்ளிட்ட ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி