ஆப்நகரம்

கரூரில் கைப்பற்றப்பட்ட பணம் நத்தத்திற்கு சொந்தம்

நத்தம் விஸ்வநாதன், கீர்த்திலால் உள்ளிட்டோரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைகள் தொடர்பான விவரங்களை வருமானவரித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

TNN 17 Sep 2016, 1:09 pm
சென்னை: நத்தம் விஸ்வநாதன், கீர்த்திலால் உள்ளிட்டோரின் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைகள் தொடர்பான விவரங்களை வருமானவரித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
Samayam Tamil income tax department reveals details about raid in natham viswanathan
கரூரில் கைப்பற்றப்பட்ட பணம் நத்தத்திற்கு சொந்தம்


முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், கோவை துடியலூர் உட்பட பல பகுதிகளில் பிரமாண்டமாக நடைக்கடை நடத்திவரும் கீர்த்திலால் நிறுவனத்தார் வீடுகள், அலுவலகங்கள், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, மீனாட்சி கல்விக் குழுமங்களின் உரிமையாளர் வீடு, அலுவலகம் உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், வருமான வரித்துறையினரின் சோதனைகள் தொடர்பான விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, கரூரில் அன்புநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.5 கோடி முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்குரியது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பேரவைத் தேர்தலின் போது, விஸ்வநாதனின் மகன் அமர்நாத் அனுப்பியது தான் இந்த பணம் என்பது உறுதியாகியுள்ளது என்றும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சோதனையில் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் இருந்து ரூ.65 லட்சம் கைப்பற்றப்பட்டதாகவும் வருமானவரித்துறை குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், கீர்த்திலால் குழுமத்தில் நடந்த சோதனையில் ரூ.2.5 கோடி கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி