சென்னையின் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 90 கோடி ரூபாய் பணமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடைசெய்யப்பட்ட பிறகு கருப்புப்பணம் வைத்திருந்தவர்கள் அவற்றை பல்வேறு வழிகளில் மாற்ற முயற்சி செய்துவந்தனர். அதனால் ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தது. அதன் பிறகும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததை அடுத்து வரிமான வரித்துறையினர் சென்னையில் 8 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி மற்றும் பிரேம் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அண்ணாநகர் மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட எட்டு இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில் 80 கோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகளும், 10 கோடி ரூபாய் புது 2000 ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமல்லாமல் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் பெரும் புள்ளிகளின் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனென்றால் சேகர் ரெட்டி, தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். இன்று மாலை வரை சோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Chennai Income Tax Investigation Sleuths Seize Rs. 80 Crore Old Currencies, Rs. 10 Crore Newly Introduced 2000 denomination and 100 Kilo Gold From Srinivasa Reddy and Sekar Reddy Office and Home.
கடந்த 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடைசெய்யப்பட்ட பிறகு கருப்புப்பணம் வைத்திருந்தவர்கள் அவற்றை பல்வேறு வழிகளில் மாற்ற முயற்சி செய்துவந்தனர். அதனால் ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தது. அதன் பிறகும் பல்வேறு முறைகேடுகள் நடந்ததை அடுத்து வரிமான வரித்துறையினர் சென்னையில் 8 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் தொழிலதிபர் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி மற்றும் பிரேம் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அண்ணாநகர் மற்றும் தியாகராய நகர் உள்ளிட்ட எட்டு இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில் 80 கோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுகளும், 10 கோடி ரூபாய் புது 2000 ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதுமட்டுமல்லாமல் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள 100 கிலோ தங்க கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் பெரும் புள்ளிகளின் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனென்றால் சேகர் ரெட்டி, தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய நண்பர் ஆவார். இன்று மாலை வரை சோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
Chennai Income Tax Investigation Sleuths Seize Rs. 80 Crore Old Currencies, Rs. 10 Crore Newly Introduced 2000 denomination and 100 Kilo Gold From Srinivasa Reddy and Sekar Reddy Office and Home.