ஆப்நகரம்

vijay: இன்றே ஆஜராக வேண்டும்... மீண்டும் ஆஜராக விஜய்க்கு வருமானவரித்துறை சம்மன்... மாஸ்டர் படப்பிடிப்பு முடியுமா?

அரசியல் நோக்கத்துடன் செய்யப்படுகின்றன என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், மேலும் மேலும் அந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாகத்தான் இதுபோன்ற நடைமுறைகள் இருக்கின்றன.

Samayam Tamil 10 Feb 2020, 11:20 am
கடந்த 6ஆம் தேதி வருமான வரித்துறையினர் நடிகர் விஜய், ஃபைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்ட பலரிடமும் சோதனை நடத்தினர். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய் சென்னை வரவேண்டி இருந்தது. இந்த சோதனையால் மாஸ்டர் படப்பிடிப்பு தடைபட்டது. அதாவது, சுமார் 23 மணி நேரத்திற்கும் மேலாக வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்றது. இதற்காக படப்பிடிப்புத் தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டார் விஜய்.
Samayam Tamil master


ஏ.ஜி.எஸ் அலுவலகம், ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் கிடைத்தபோதும் நடிகர் விஜயிடமிருந்து பணம்,பொருள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை.

இந்த குளறுபடிகளால் படப்பிடிப்பு தடைபட்டது. இதனைத் தொடர்ந்து கடலூரில் உள்ள நெய்வேலி சுரங்கத்தில் இரண்டாவது எண் சுரங்கத்தில் மீண்டும் படப்பிடிப்புத் தொடங்கியுள்ளது.

ரசிகர்கள் தொடர்ந்து விஜயைக் காண வந்த வண்ணம் இருக்கின்றனர். விஜயும் வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்.



இந்நிலையில், தற்போது விஜய் இன்றே ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறையினர் விஜய்க்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த சோதனைகள் எல்லாம் அரசியல் நோக்கத்துடன் செய்யப்படுகின்றன என்று பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், மேலும் மேலும் அந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாகத்தான் இதுபோன்ற நடைமுறைகள் இருக்கின்றன.

விஜய்யை விடாமல் துரத்தும் பாஜக..! மாஸ்டர் பட ஷூட்டிங்கில் போராட்டம்...

ஏற்கனவே, காலம் கடந்து போவதால், அனுமதிக்கப்பட்ட கால இடைவெளிக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்த நேரத்தில் விஜய் மீண்டும் மீண்டும் இப்படி அலைக்கழிக்கப்படுவது, படப்பிடிப்பை முழுமையாக பாதிக்க வாய்ப்புள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி