ஆப்நகரம்

மீண்டும் சசிகலா சொந்தங்களிடம் ஐடி ரெய்டு!

சென்னையில் சசிகலா உறவினர்களின் மதுபான ஆலையில் வருமான வரி துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 27 Dec 2017, 9:34 pm
சென்னையில் சசிகலா உறவினர்களின் மதுபான ஆலையில் வருமான வரி துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil income tax officials resume searches on premises of sasikala relatives
மீண்டும் சசிகலா சொந்தங்களிடம் ஐடி ரெய்டு!


கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி சசிகலா உறவினர்கள், நண்பர்கள், வியாபாரிகள் என 187 இடங்களில் 1100க்கம் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு குடும்பத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு, மூன்று மாநில வருமான வரித்துறையினர் நடத்திய இந்த சோதனைக்கு பலரும் எதிரப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று தற்போது மீண்டும் சசிகலா உறவினர் வீடுகளிலிலும், தொழிலகங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்ட நடத்தியுள்ளனர்.

இது குறித்து கிடைத்த தகவலின் படி, சென்னை தாம்பரம் அருகேயுள்ள படப்பையில் மிடாஸ் மதுபான ஆலையில் இன்று முதலில் சோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சசிகலாவின் உறவினர்கள் வீடு, நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மூன்று மணி நேரமாக நடந்த இந்த சோதனை, நாளையும் தொடர்ந்து நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி