ஆப்நகரம்

மீண்டும் திமுக-வில் சேர திட்டமிட்ட அதிமுக நிர்வாகி வீட்டில் ஐ.டி. ரெய்டு

திமுகவில் இணைய இருந்த முன்னாள் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

Samayam Tamil 9 Apr 2019, 10:13 pm
திமுக-வில் இணைவதற்கு ஆயத்தமாக இருந்த முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil திமுக-வில் இணைய ஆயத்தமான முன்னாள் அதிமுக வீட்டில் ஐ.டி. ரெய்டு
திமுக-வில் இணைய ஆயத்தமான முன்னாள் அதிமுக வீட்டில் ஐ.டி. ரெய்டு


திமுக-வில் இருந்த போது 2006 முதல் 2011 வரை கடலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு எம்.எல்.ஏ-வாக பதவி வகித்தவர் ஐயப்பன். திமுக-வில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக பிறகு அதிமுக-வில் அவர் இணைந்தார்.

அண்மையில் அமைச்சர் எம்.சி. சம்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக மீது அதிருப்தியில் இருந்த ஐயப்பன், கட்சியில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இது கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை உருவாக்கியது.

இந்நிலையில், நேற்று சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஐயப்பன் ஆதரவு தெரிவித்தார். இது இந்த விவகாரத்தில் மேலும் புயலை கிளப்பியது. பிறகு அவர் மீண்டும் திமுக-வில் இணைவது உறுதியானது.

வரும் வியாழன்று கடலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக-வில் இணைய ஐயப்பன் திட்டமிட்டிருந்தார். ஆனால் இதற்கிடையில் இன்று கடலூர் செம்மண்டலத்தில் உள்ள ஐயப்பன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

சுமார் 3 மணிநேரம் நீடித்த இந்த சோதனையில் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஆனது. சோதனை காரணமாக அவருடைய வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால் இந்த சோதனையில் பணமோ, ஆவணமோ கைப்பற்றப்படவில்லை என தகவல்கள் வெளிவந்துள்ளன.

அடுத்த செய்தி