ஆப்நகரம்

சீன அதிபர் வருகை: சென்னையில் சீன நபரிடம் போலீஸ் விசாரணை!

சென்னைக்குச் சீனா பிரதமர் இன்று வருகிறார். இதற்காக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈட்டுப்பட்டு வருகின்றனர். இவ்விலையில் பெங்களூரிலிருந்து சென்னைக்குப் பேருந்தில் வந்த சீனாவைச் சேர்ந்த ஒருவரிடம் காவல்துறையினர் விசாரணை...

Samayam Tamil 11 Oct 2019, 11:50 am
சென்னையில் இந்தியா சீனா இடையே நடக்கும் 2வது முறைசாரா மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சென்னை வந்து கொண்டிருக்கின்றனர்.
Samayam Tamil 14_04_2019-inquary_19131676


இரு நாட்டுத் தலைவர்கள் மாமல்லபுரம் வரவுள்ள நிலையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீன அதிபருக்காக, சித்ரவதைக்கு உள்ளாகும் காவலர்கள்!

இந்நிலையில், காவல்துறையினர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சோதனையில் ஈட்டுப்பட்டிருந்தனர். அப்போது, பெங்களூரிலிருந்து வந்த பேருந்து ஒன்றில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் வந்திறங்கினார்.

’ஷி’க்கு ‘ஹாய்’ சொல்லுங்க- வரிந்து கட்டி வேலை செய்யும் அதிமுக, பாஜக!

இதை பார்த்த காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது பெயர் ஜிம்மின் என்றும் தனது வயது 27 என்பதையும் கூறியுள்ளார். தொடர்ந்து தனது சொந்த பணிக்காக அடையாற்றில் உள்ள கார் நிறுவனத்துக்கு வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

சந்தேகம் தீராத காவல்துறையினர், சீனா நபர் கூறிய கார் நிறுவனத்தின் ஊழியர்களை நேரில் வர அறிவுறுத்தி, விசாரணை நடத்தினர். விசாரணையில் சீனா நபர் கூறிய தகவல்கள் உண்மை என நிரூபிக்கப்பட்ட பிறகு, அவரை வெளியே செல்ல அனுமதித்தனர்.

அடுத்த செய்தி